2016 செப்டம்பர் 30 முடிய, மலேசியாவில் தற்காலிக வேலை அனுமதிகள் வைத்திருந்த அன்னிய தொழிலாளர்கள் எண்ணிக்கை 1,854, 684.
இவர்களுக்கு குடிநுழைவுத் துறை தற்காலிக வேலை அனுமதி(பிஎல்கேஎஸ்)களை வழங்கியுள்ளது என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
பிஎல்கேஎஸ் வைத்திருப்போரில் அதிகமானோர் இந்தோனேசியர்கள் (749,266). அவர்களை அடுத்து நேப்பாளிகள் (411,364). மூன்றாவது இடத்தில் வங்காளதேசிகள்(237,991).
“வெளிநாட்டவரை வேலைக்கு வைத்திருப்பது காலியாக உள்ள இடங்களை நிரப்பும் ஒரு தற்காலிக நடவடிக்கைதான். பணிக்காலம் முடிவடைந்ததும் வெளிநாட்டார் அவர்களின் தாய்நாட்டுக்கே திரூம்பிச் சென்று விட வேண்டும்”, என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பதிலில் ஜாஹிட் கூறினார்.


























அடுத்த தேர்தலுக்கு இப்போதே தயாராகிற மாதிரியா.?
நம் நாட்டில் வியாபாரம் செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள்[ சட்டத்திற்குட்பட்டும், சட்டவிரோதமாகவும்] எத்தனை லட்சம் என உள்துறை அமைச்சர் ஏன் குறிப்பிடவில்லை? இவர்கள் எப்படி திரும்பிப் போவார்கள்?
உங்களுக்கு தெரிந்தது 2 மில்லியன் தற்காலிக அன்னிய தொழிலாளர்கள், தெரியாயது 2 மில்லியன் சட்ட விரோத நிரந்திர அன்னிய தொழிலாளர்கள். ஆகா மொத்தம் 4 மில்லியன் அந்நிய தொழிலாளர்கள்.
குறைந்த பட்சமாக 4,000,000 X MYR 1000 = MYR 4,000,000,000
ஒரு மாதத்தில் நம் நாட்டிலிருந்து அந்நியர்களால் தங்கள் நாட்டிற்கு அனுப்பபடும் என்றால் ஒரு நாளைக்கு நம் நாட்டிலிருந்து வெளியாகும் பணம் MYR 133,333,333.33
அப்படியானால் இந்த அந்நியர்களால் நம் நாட்டின் ஒரு நாள் வருமானம் என்ன என்று அமைச்சர் கூறலாமே ?
இல்லையென்றால் மக்களிடம் GST வரி வசூலித்து அதை அந்நிய தொழிலாளர்கள் என்ற பெயரில் அரசாங்கமும் அமைச்சர்களும் பண சலவையில் ஈடுபடுகிறார்களோ என்று மக்கள் சந்தேக படலாம்.
தற்காலிகம் என்பது மற்றவர்களுக்கு இருக்கலாம். ஆனால் பங்களாதேசிகளுக்கு அல்ல! அவர்கள் நிரந்திரமாகி விட்டார்கள்!
இதை சொல்லி பெருமை பட என்ன இருக்கு ,பாம்பின் கால் பாம்பறியும் .