சனிக்கிழமை நடைபெறும் பக்கத்தான் ஹராபான் மாநாட்டில் பாஸ் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதை பாஸ் தகவல் தலைவர் நஸ்ருடின் ஹசான் உறுதிப்படுத்தினார்.
“நாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை. காரணம் டிஏபி. டிஏபியிடன் நாங்கள் உறவுகளைத் துண்டித்துக்கொண்டு நீண்ட காலமாயிற்று”, என்றவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஹராபான் மாநாடு ஷா ஆலம் ஐடீல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்ள பாஸ், பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இரண்டையுமே ஹாராபான் அழைத்துள்ளது.


























பாஸ் நமக்கு வேண்டவே வேண்டாம்
அரசியல் அனாதைகளாகி விட்டவர்கள் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் ஒன்றுதான்.
கழுவிய மீனில் நழுவிய மீன் இந்த கட்சி…! இந்த மீனை நம்பி அடுத்த பொதுத் தேர்தல் கடலில் இறங்கினால் மூழ்கிட நேரும்.உஷார் பக்காத்தான் ஹரப்பான்..!
இந்த மதவெறி நாதாரிகளை அழைத்ததே தவறு– பகுத்தறிவு இல்லாத ஈன ஜென்மங்கள். அந்த கிணற்றுக்குள்ளேயே இருக்கட்டும்.
இவர்கள் இரண்டாம் கேட்டிடங்கள் தேவையில்லை .
அழைப்பிதழ் கிடைக்க வில்லை என்றால் இப்படி உல்டா பண்ணிட வேண்டியதுதான் …..
அம்னோ மாநாட்டில் கலந்து உங்கள் விசுவாசத்தை காட்டுங்கள்.