உங்கள் அரசியல் வாழ்க்கையைப் பார்க்காதீர்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்: எதிரணிக்கு ஜைட் அறிவுறுத்தல்

saidஅரசியல்வாதிகள்    நாட்டைக்  காக்க   முற்பட   வேண்டுமே    தவிர    தங்கள்    அரசியல்   வாழ்க்கைக்கு   முன்னுரிமை    அளிக்கக்  கூடாது     என   முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்    கூறினார்.

“எல்லாருக்கும்   பிரதமராக    வேண்டும்,  துணைப்  பிரதமராக     வேண்டும்    என்று   ஆசைதான்.  ஆனால்,  நீங்கள்    நாட்டைப்    பற்றிக்  கவலைப்படுவராக  இருந்தால்,   உங்கள்    பேரப்  பிள்ளைகளுக்காக    நாட்டைப்    பாதுகாக்க  விரும்பினால்     பிரதமரை   மாற்றுவது     மட்டும்   போதாது.

“அடிப்படை   மாற்றங்களைச்   செய்ய   வேண்டும்.  துணிச்சல்காரர்களும்   கொள்கைப்  பிடிப்பாளர்களுமே   அப்படிப்பட்ட     செயல்களைப்   புரியத்தக்கவர்கள்”,  என  ஜைட்   தம்   வலைப்பதிவில்   கூறினார்.

அடுத்த     பொதுத்     தேர்தலில்   எதிரணி   ஆட்சிக்கு   வந்தால்   யாருக்குப்   பிரதமர்   பதவி   என்ற   விவகாரம்    அடிபடுவது   தொடர்பில்  ஜைட்   இவ்வாறு   கருத்துத்   தெரிவித்திருந்தார்.