செய்தியைத் ‘திரித்துக் கூறியதற்காக’ குவான் எங்குக்கு ரிம300ஆயிரம் இழப்பீடு கொடுக்க என்எஸ்டிபி-க்கு நீதிமன்றம் உத்தரவு

cmபினாங்கு   உயர்   நீதிமன்றம்,   பினாங்கு   முதலமைச்சர்   லிம்   குவான்   எங்   குறித்த    செய்தி  ஒன்றை  “திரித்தும்    தவறாகவும்”   வெளியிட்டதற்காக    நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்  பெர்ஹாட் (என்எஸ்டிபி)   அவருக்கு  ரிம300,000   கொடுக்கும்படி  இன்று   உத்தரவிட்டது.

செலவுத்   தொகையாக   ரிம35,000  சேர்த்துக்  கொடுக்கும்படியும்    உயர்  நீதிமன்ற   நீதிபதி    ரோசில்லா   யோப்    உத்தரவிட்டார்.

ரோசில்லா   தம்   தீர்ப்பில்,   பெரித்தா   ஹரியான்   செய்தியாளர்    சித்தி   சோபியா   முகம்மட்   நசிர்   எழுதிய   செய்தி  “திரித்துக்  கூறப்பட்டது,  தவறானது, களங்கத்தை   உண்டுபண்ணுவது”   என்று   குறிப்பிட்டார்.