‘கிட் சியாங் இனவாதியா?’ போட்டி நடத்தும் அனுவாருக்கு எதிராக போலீஸ் புகார்

dapஅம்னோ    தகவல்    தலைவர்     அனுவார்    மூசா    இனவாதத்தைத்   தூண்டி  விடுவதாகவும்  லிம்  கிட்  சியாங்கின்  உயிருக்கு   அபாயத்தை   உண்டுபண்ணுவதாகவும்   குற்றஞ்சாட்டி   அவருக்கு   எதிராக  போலீஸ்   புகார்   செய்யப்பட்டுள்ளது.

“எல்கேஎஸ்   ஓர்  இனவாதி,  இஸ்லாத்துக்கு   எதிரி,   51  ஆண்டுகளாக   ஒரு   சர்வாதிகாரியா   இருந்து  வந்துள்ளார்,  உண்மையா”   என்ற  தலைப்பில்  கட்டுரை   எழுத  வேண்டும்   அல்லது   சமூக  வலைத்தளங்களில்   பதிவிட   வேண்டும்.  சிறந்த  கட்டுரை  அல்லது  பதிவுக்கு   ரிம10,000  பரிசு  என்று   அனுவார்   அறிவித்திருப்பதன்   தொடர்பில்தான்   இந்தப்  போலீஸ்   புகார்.

பெட்டாலிங்  ஜெயா   மாநகராட்சி   மன்ற  கவுன்சிலர்   ஜமாலியா   ஜமாலுடின்   இன்று  காலை   டமன்சாரா  போலீஸ்   நிலையத்தில்   புகார்   செய்தார்.

அவருடன்  போலீஸ்  நிலையம்    சென்ற   டிஏபி    சட்டமன்ற   உறுப்பினர்   இயோ  பீ  இன்,   அனுவார்   கட்டுரைப்   போட்டியை   இரத்துச்   செய்து   மன்னிப்பு    கேட்டால்   போலீஸ்   புகார்  மீட்டுக்கொள்ளப்படும்   என்றார்.