சாலே: மலேசிய பொருளாதாரத்தைக் கீழறுப்பது நாட்டுப்பற்றல்ல

keruakஅன்னிய   முதலீட்டாளர்களை   பயமுறுத்தி   விரட்டுவது   நாட்டுப்பற்றுள்ள   செயல்   அல்ல,  அது   தேசத்  துரோகம்  எனத்   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே    சைட்   கெருவாக்   கூறினார்.

“சிலர்  கூறிக்கொள்கிறார்கள்   நாட்டுப்பற்றின்  காரணமாகத்தான்   பிரதமரையும்    நாட்டையும்   குறைகூறுவதாக.

“அடோல்ப்  ஹிட்லர்கூட   நாட்டுப்பற்றுள்ளவர்தான்.   அந்த   நாட்டுப்பற்றிலிருந்து     உருவானதுதான்  நாஸிஸம்.  அதனால்   100  மில்லியன்  பேர்    மாண்டனர்.  வரலாற்றாசிரியர்கள்  இதை  ஒப்புக்கொள்வார்கள்”,  என  சாலே   அவரது  வலைப்பதிவில்   கூறினார்.