பூச்சோங் கொள்ளை, கற்பழிப்பு: சந்தேக பேர்வழி 12வது மாடியிலிருந்து விழுந்து மாண்டான்

arrestமே   11-இல்,  பூச்சோங், பண்டார்    கின்ராரா   சூதாட்ட மையத்தில் கொள்ளையடித்ததுடன்   அங்கு பணி புரிந்த  பெண்ணைக்  கற்பழித்ததாக   சந்தேகிக்கப்படும்   இரு ஆடவர்களில் ஒருவன்  நேற்றிரவு   கோலாலும்பூர்  ஸ்ரீ   செமராக்   மக்கள்   வீடமைப்புத்   திட்டத்தில்   12வது   மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்டான்.

இரவு     மணி    10.10க்கு   அவன்   வீட்டைச்  சுற்றி  வளைத்துக்கொண்ட   போலீசாரிடமிருந்து   தப்ப  முயன்றபோது   அச்சம்பவம்   நிகழ்ந்ததாக   செர்டாங்   மாவட்ட   போலீஸ்    தலைவர்   மெகாட்   முகம்மட்   அமினுடின்   கூறினார்.

“போலீசார்   நீண்ட  நேரம்    கதவைத்    தட்டியும்    சந்தேகப்    பேர்வழி      கதவைத்  திறக்காததால்  அவர்கள்   கதவை   உடைத்துக்கொண்டு    உள்ளே   சென்றனர். உள்ளே    அவ்வாடவன்   போலீசாரிடமிருந்து   தப்பிக்க   ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் தொங்கி கொண்டிருந்தான்.

“சரணடையுமாறு   அவனிடம்  பலமுறை  கூறியும்  கேளாமல்   அவன்   மல்  கீழே  குதித்தான்”,  என்றவர்   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

கீழே   விழுந்தவனை   மருத்துவமனைக்குக்  கொண்டு   சென்றார்கள்.  அங்கு     அவன்   இறந்து  விட்டதை    மருத்துவர்கள்   உறுதிப்படுத்தினார்கள்.