1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை முடிவுக்கு வந்தது

fuziபோலீஸ்   1எம்டிபிமீது   மேற்கொண்ட  விசாரணை  முடிவுக்கு   வந்தது.  அதில்  புதிதாக   எதுவும்   கண்டுபிடிக்கப்படவில்லை   என்பதால்   பொதுமக்களுக்குத்  தெரிவிக்க   எதுவுமில்லை  என   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்   முகம்மட்  ஃபுசி  ஹருன்   தெரிவித்தார்.

“விசாரணை  முடிவடைந்தது.  மேல்  விசாரணை   செய்ய   வேண்டிய   அவசியமில்லை.

“ஒருவேளை   பொதுக்கணக்குக்குழு(பிஏசி)  அல்லது   அமைச்சரவை   உத்தரவிட்டால்  மேல்விசாரணை   செய்வோம்”,  என  ஃபுசி   கிளந்தான்,  கோத்தா  பாருவில்   கூறினார்.