1எம்டிபியில் கையாடப்பட்ட பணத்திலிருந்து எஸ்யுபிபி குறைந்தது ரிம1மில்லியனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுவது குறித்து சரவாக் பிகேஆர் எம்ஏசிசியில் புகார் செய்துள்ளது.
2012இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கிலிருந்து அப்பணம் வந்தது என்று ஸதம்பின் பிகேஆர் இளைஞர் தலைவர் மொ குய் சுங் கூறினார்.
“1எம்டிபி தொடர்பான எல்லாப் புகார்களும் 1எம்டிபி பணிக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எம்ஏசிசி தெரிவித்தது”, என்றவர் கூறியதாக போர்னியோ போஸ்ட் அறிவித்தது.
1எம்டிபிமீதான விசாரணை அறிக்கைகளிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மொ அப்பு்காரைச் செய்துள்ளார்.
நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து 2012-இல் ரிம500,000மும் 2013-இல் ரிம500,000மும் இரண்டு தவணைகளில் எஸ்யுபிபிக்கு பணம் சென்றுள்ளது.
அதன்பின்னர் 2013 மார்சில் மேலும் ரிம500,000மும் அதனை அடுத்து ரிம2 மில்லியனும், ஆக மொத்தம் ரிம3.5மில்லியன் அக்கட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

























