பேங்க் நெகரா மிகைவிலை கொடுத்து நிலம் வாங்கியதா?

பேங்க்   நெகரா   நிதி   அமைச்சிடமிருந்து  வாங்கிய   67.41  ஏக்கர்   நிலத்துக்குக்  கொடுத்த   விலை   அதிகம்   என்று   நம்பப்படுகிறது.  ரிம2.066  மில்லியனுக்கு   அது  அந்நிலத்தை   வாங்கியது.  அப்பணம்   1எம்டிபி   கடனைக்  கட்டுவதற்குப்   பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாம்.  த   ஸ்டார்   நாளேடு   தெரிவிக்கிறது.

பேங்க்  நெகாரா   பயிற்சி   வசதிகளுக்காகத்தான்  அந்நிலத்தை   வாங்கியது   என்பதால்   அதற்கு     அவ்வளவு   விலை  கொடுத்திருக்க   வேண்டியதில்லை   என  சில   வட்டாரங்கள்    தெரிவித்தன.

மே  24-இல்,  நிதி   அமைச்சர்  லிம்   குவான்   எங்,   இண்டர்நேசனல்    பெட்ரோலியம்   இன்வெஸ்ட்மெண்ட்   நிறுவனத்துக்கு   1எம்டிபி  கொடுக்க   வேண்டிய   கடனைக்  கட்டுவதற்கு    பேங்க்  நெகாரா மற்றும்  கருவூலத்தின்   பணம்    பயன்படுத்திக்  கொள்ளப்பட்டிருப்பதாகக்  கூறினார்.