மஇகா இளைஞர் பிரிவு நம்பிக்கை இழக்கவில்லை

14-வது பொதுத் தேர்தலின் தோல்வி, தங்களின் ஊக்கத்தை உடைக்காது, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பாக தங்களை உருவாக்கும் என மஇகா இளைஞர் பிரிவு கூறியுள்ளது.

சிலாங்கூர் மஇகா இளைஞர் தலைவர், டி.கஜேந்திரன் இளைஞர் அணி நம்பிக்கை இழக்காது என உறுதியளித்தார்.

“மத்திய அரசை ஹராப்பானிடம் இழப்போம் என நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பிஎன் இனி ஆளும் கட்சி அல்ல. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2013-2018 காலப்பகுதியில், சிலாங்கூர் மாநில மஇகா, அம்மாநில மக்களுக்குத் தங்கள் சேவையை வழங்கியுள்ளது என்றார் அவர்.

“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்த, சிலாங்கூர் மக்களை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் தவறுகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம்.”

இளைஞர் பிரிவு எனும் வகையில், அவரும் அவரது கட்சி உறுப்பினர்களும், புதிய அரசாங்கம், குறிப்பாக சிலாங்கூரில், மக்களுக்குச் சேவை ஆற்றுவதை உறுதி செய்ய அழுத்தம் கொடுக்க தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

“மாநிலத்திலும், மத்தியத்திலும் எதிர்க்கட்சியாக செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம். சிலாங்கூர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பக்காத்தான் ஹராப்பான் நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார் அவர்.

பெரித்தா டெய்லி