முன்னாள் அம்னோ பிரதிநிதி பேராக் எம்பி ஆலோசகரா? எம்பிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக Otai Reformis எச்சரிக்கை

பேராக்   மந்திரி   புசார்  அஹமட்   பைசல்  அஸுமு,  முன்னாள்   அம்னோ   சட்டமன்ற   உறுப்பினரான  சைனோல்  பாட்ஸி பஹாருடினை     தமக்கு   ஆலோசகராக   நியமனம்  செய்திருப்பதற்குத்   தக்க   விளக்கமளிக்கத்   தவறினால்   பேராக்   செயலகத்துக்கு   வெளியில்    ஆர்ப்பாட்டம்   நடத்தப்போவதாக    Otai Reformis  எச்சரித்துள்ளது.    Otai Reformis  அன்வார்   இப்ராகிமின்   தீவிர   ஆதரவாளர்களைக்  கொண்ட   ஓர்  அமைப்பாகும்.

“ஆட்சிமன்ற  உறுப்பினர்   பதவிக்கு   ஒப்பான  மந்திரி    புசாரின் ஆலோசகராக   சைனோல்   நியமிக்கப்பட்டிருப்பதையும்   அதேபோல்   மற்ற   அம்னோ/பின்    தலைவர்கள்      வேறு   பணிகளுக்கு   நியமிக்கப்படுவதையும்    கண்டிக்கிறோம்.

“இதற்காகவா  அம்னோ/பிஎன்னை   எதிர்த்துப்  போராடி   வந்தோம்?  ஏன்  நியமனம்   செய்யப்பட்டது   என்பதை   ஒரு   வாரத்துக்குள்   மந்திரி  புசார்  விளக்கியாக   வேண்டும்.

“விளக்கமளிக்காவிட்டால்   பேராக்   Otai Reformis   பக்கத்தான்   ஹரப்பான்   ஆதரவாளர்களைத்   திரட்டி   மாநிலச்   செயலகத்துக்குமுன்   ஆர்ப்பாட்டம்  செய்யும்”.

சைனோல்  நியமனம்   தொடர்பில்   பைசலுடன்    “நேருக்கு   நேர்”  பேச்சுகள்   தேவை  என்றும்  கோரிக்கை  விடுக்கப்பட்டிருக்கிறது.

சுங்கை   மானிக்   சட்டமன்ற   உறுப்பினரான   சைனோல்,   பேராக்கில்    ஹரப்பான்   அரசு   அமைக்க   பைசலுக்கு   ஆதரவு   அளித்ததைத்  தொடர்ந்து   அம்னோவிலிருந்து  நீக்கப்பட்டார்.

அதன்பின்னர்   அவர்   பெர்சத்துவில்   சேர்ந்து   மந்திரி   புசாரின்   ஆலோசகராக   நியமிக்கப்பட்டார்.