கைதான குடும்பத்தலைவி மலேசியாவின் முதலாவது பெண் ஐஎஸ் தலைவராம்

14வது   பொதுத்  தேர்தலின்போது   பூச்சோங்கில்    வாக்களிப்பு   மையம்  ஒன்றைத்    தாக்க  முயன்றதற்காகக்    கைது    செய்யப்பட்ட  சிலாங்கூர்   குடும்பத்   தலைவி   நாட்டின்  முதலாவது    பெண்  ஐஎஸ்  தலைவர்  என  அடையாளம்   காணப்பட்டிருக்கிறார்.

நேற்று   உத்துசான்   மலேசியாவிடம்   புக்கிட்   அமான்  சிறப்புப்  போலீஸ்   பிரிவின்   பயங்கரவாத-எதிர்ப்பு  உதவி  இயக்குனர்  ஆயுப்  கான்  மைடின்  பிச்சை     இதை   உறுதிப்படுத்தினார்.

“இந்தோனேசியா   முதலிய   நாடுகளில்    செய்யப்படுவதுபோல்   இங்கும்   பெண்கள்  முன்னணியில்  இருந்து   செயல்பட  அனுப்பப்படுகிறார்கள்.  முன்பு (மலேசியாவில்)   பெண்கள்   ஐஎஸ்ஸில்  சேரும்   கணவன்மாருக்கு  நிதியுதவி   மட்டுமே  செய்வார்கள்.

“இந்தப்  போக்கு  வளராமல்  தடுக்க   இடைவிடாத   கண்காணிப்பு  அவசியம்.

“2012 -இலிருந்து  ஐஎஸ்   தொடர்புள்ள  43  பெண்கள்   நாட்டில்  கைது   செய்யப்பட்டிருக்கிறார்கள்”,  என்றாரவர்.