எச்எஸ்ஆர்மீதான பேச்சுகளை சிங்கப்பூர் வரவேற்கிறது

அதி  வேக  இரயில்   திட்டம்(எச்எஸ்ஆர்)  மீது   பேச்சுகளைத்   தொடங்கும்    மலேசிய   ஆலோசனையை    சிங்கப்பூர்   வரவேற்பதாக  அக்குடியரசின்  போக்குவரத்து   அமைச்சு(எம்ஓடி)  கூறியது.

மலேசிய  பொருளாதார  விவகார  அமைச்சர்   முகம்மட்  அஸ்மின்   அலியிடமிருந்து  2018,  ஜூலை   23இல்   ஒரு  கடிதம்   வந்ததாகவும்    அதில்  மலேசிய   அரசாங்கம்   எச்எஸ்ஆர்  திட்டம்  பற்றிய   விவரங்களை  ஆராய்ந்து   கொண்டிருப்பதாகவும்  விரைவில்   அதன்மீது   சிங்கப்பூருடன்   பேச்சுகளைத்   தொடங்கும்   என்று   குறிப்பிடப்பட்டிருந்ததாகவும்   எம்ஓடி  கூறியது.

சிங்கப்பூர்   ஜூன்   முதல்   நாள்   தொடங்கி  மலேசிய    அரசாங்கத்திடம்   அத்திட்டம்மீதான    அதன்   நிலைப்பாட்டை  அரசந்திர  வழிகளில்   தெளிவுபடுத்தும்படி   கேட்டுக்கொண்டு   வந்திருப்பதாக   எம்ஓடி   தெரிவித்தது.

மலேசிய    அரசாங்கம்   அத்திட்டம்மீது   பேச்சு   நடத்த   விரும்பினால்  ஜூலை  31க்குள்   பேச்சுகளைத்   தொடங்கி  இருக்க   வேண்டும்.

“2018  ஆகஸ்ட்  1-இல்  கூட  மலேசியா   சந்திப்புக்கு   நாள்  ஒன்றைக்  குறிப்பிடவில்லை”,  என  எம்ஓடி  நேற்ரிரவு   ஓர்  அறிக்கையில்   தெரிவித்தது.

இதனிடையே,  பேச்சுகளை  இம்மாதம்  வைத்துக்கொள்ளலாம்   என   முகம்மட்  அஸ்மின்  கூறியதாக   செய்திகள்  தெரிவிக்கின்றன.