லங்காவியில் பைபள் கையேடுகளை விநியோகித்த பின்லாந்து நாட்டவர் நால்வர் கைது

நேற்று லங்காவி தங்கு விடுதியில் பின்லாந்து நாட்டவர் நால்வரைப் போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் பொது இடங்களில் சமயப் பிரச்சார கையேடுகளையும் அறிக்கைகளையும் விநியோகம் செய்தார்களாம்.

அவர்களுக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதை அடுத்து வயது 27-க்கும் 60-க்கும் இடைப்பட்ட அந்நால்வரும் கைது செய்யப்பட்டதாக லங்காவி போலீஸ் தலைவர் முகம்மட் இக்பால் இப்ராகிம் கூறினார்.

கைது செய்தபோது அவர்களிடமிருந்து 47-பேனாக்கள், பைபள் வாசகங்களைக் கொண்ட 336 கையேடுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று இக்பால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.