256வது அரச மாநாடு

கோலாலம்பூர், பிப்ரவரி 19 – 256வது அரச மாநாடு இன்று தொடங்கியது. கூட்டத்தின் தலைவரான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இஸ்தானா நெகாராவின் வளாகத்தில் “செம்பகா குனிங்” மரக்கன்றுகளை நட்டு கூட்டத்தை துவக்கினார்.

கடந்த ஆண்டு 255 வது மாநாட்டின் போது நெகேரி செம்பிலன் துவாங்கு முஹ்ரிஸ் அல்மார்ஹம் துவான்கு முனாவிரின் யாங் டிபெர்டுவான் பெசார் ஒரு “மெர்பாவ்” மரக்கன்றை நட்டார். அல்-சுல்தான் அப்துல்லாவை 16வது யாங் டி-பெர்டுவான் அகோங்காக நியமிப்பதற்கு முன்னர், அடையாள மரம் நடும் விழா ஒருபோதும் நடத்தப்படவில்லை.

இந்த கூட்டத்தில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா, திரெங்கானு சுல்தான் மிசான் ஜைனல் ஆபிதீன், பெர்லிஸ் துவாங்கு சையத் சிராஜுதீன் சையத் புத்ரா ஜமல்லுலைல், துவாங்கு முஹ்ரிஸ் மற்றும் கெடா சுல்தான் அல் அமினுல் காரிம் சுல்தான் ஆகியோர் க்லந்து கொண்டனர்.

கிளந்தானை பிரதிநிதித்து துங்கு மக்கோத்தா, துங்கு டாக்டர் முஹம்மது பைஸ் பெட்ரா சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மற்றும் பகாங்கிலிருந்து துங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா அல்-சுல்தான் அப்துல்லா ஆகியோர் பிரதிநிதித்தனர்.

பினாங்கு, மலாக்கா, சபா மற்றும் சரவாக் யாங் டிபெர்டுவாஸ் ஆகியோரும் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Bernama