கொரோனா வைரஸ் | உலக இறப்பு எண்ணிக்கை 2,120-ஆக பதிவாகியுள்ளது

கொரோனா வைரஸ் | உலக இறப்பு எண்ணிக்கை 2,120-ஆக பதிவாகியுள்ளது

சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று 349 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருப்பதாக மாகாண சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இது ஹூபேயில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 62,031ஆகக் கொண்டுவருகிறது.

சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, ஹூபேயில் 10 நகரங்களில் இருந்து 279 பதிவுகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று உறுதிப்படுத்தப்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இது என்று கூறியுள்ளது.

பாதிப்பு தொடக்கத்திலிருந்து, ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முடிவில் 2,029ஐ எட்டியது, இது முந்தைய நாளிலிருந்து 108 அதிகரித்துள்ளது.

புதிய இறப்புகளில் பெரும்பாலானவை ஹூபேயின் மாகாண தலைநகர் வுஹானில் நிகழ்ந்தன, அங்குதான் வைரஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது.

வுஹான் 88 புதிய இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது, இது செவ்வாயன்று 116 ஆக இருந்தது. வுஹானில் மொத்தம் 1,585 பேர் இப்போது வைரஸால் இறந்துள்ளனர்.

உலகளாவிய மொத்த பாதிப்புகள் இப்போது 75,291 ஆகவும், 2,120 இறப்புகளாகவும் உள்ளன. இறப்புகளில் எட்டு தவிர மற்ற அனைத்தும் சீனாவின் பிரதான நிலப்பகுதியில் நிகழ்ந்துள்ளன.