“சொர்க்கத்தில் உள்ளதை போல் உணர்கிறோம்”’

“சொர்க்கத்தில் உள்ளதை போல் உணர்கிறோம்”’

அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸின் முடிவை தமிழீழ விடுதலைப் புலி குழு தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து நீக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

“140 நாட்களாகிவிட்டது. நான் உண்மையில் மிகவும் சோர்வாக இருக்கிறேன். இன்று காலை முதல் (நாங்கள்) ஒரு மகஜரை சமர்ப்பிக்கச் சென்றோம்”.

“ஆனால் எனது தந்தை வெளியான செய்தி வந்ததும், நான் சொர்க்கத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்” என்று சிரம்பான் ஜெய சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனின் மகன் அன்னுன் நான்சி குணசேகரன் கூறினார்.

டி.ஏ.பி. பிரதிநிதியான தன் தந்தை திரும்பி வருவதைக் கொண்டாட அன்னுன் நான்சி, வரவேற்பு விழாவை நடத்துவார் என்றார்.

“என் தந்தையை வீட்டிற்கு வரவேற்க என் அம்மா மஞ்சள் தண்ணீரை தயார் செய்திருந்தார்,” என்று அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலி குழுவுடன் இணைக்கப்பட்ட ஒரு விசாரணையில் 12 நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த டாமி இன்று தனது அதிகாரத்தில் செயல்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலி தலைவரின் படம் வத்திருப்பதை ஒரு குற்றச்செயலாக கருதினால், அது சட்டத்தை அவமரியாதைக்குரிய இடத்தில் வைக்கும் என்பதால் தான் கருதுவதாக அவர் கூறினார்.

அண்மையில் தலைநகரில் தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக சோஸ்மா எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.

இதற்கிடையில், பி.சுப்பிரமணியம் மற்றும் வி.பாலமுராகன் ஆகிய இரு கைதிகளின் மனைவிகளும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“இன்று நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று சுப்பிரமணியத்தின் வாழ்க்கை துணைவி லலிதா நாகப்பன் கூறினார்.

பாலமுருகனின் மனைவி கெளரி ஜெயராமன், 32, கைதிகளை விரைவில் விடுவிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

“பிப்ரவரி 24 அன்று எனது கணவருக்கு இன்னும் ஒரு வழக்கு இருந்தாலும், அது அவரது விடுதலையை பாதிக்காது என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நடந்ததற்கு பிறகு அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என்று இரும்பு வியாபாரி ஏ.கலைமுகிலனின் மனைவி தமிழ்மலர் மாசிலமணி கூறினார்.

“இந்த கடினமான காலங்களுக்குப் பிறகு நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்,” என்று 26 வயதான அந்த நிதி ஆலோசகர் கூறினார்.