பயங்கரவாதம் தொடர்பான பிற வழக்குகளையும் கவனியுங்கள் – அன்வார்

விடுதலைப் புலிகளில் அன்வார்: பயங்கரவாத தொடர்பான பிற வழக்குகளையும் கவனியுங்கள்

ஸ்ரீ இலங்காவில் செயலிழந்த பிரிவினைவாதக் குழுவாக சித்தரிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை தள்ளுபடி செய்தார் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸ். அவர் எடுத்த முடிவு குறித்து பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம், இதே போன்ற பிற வழக்குகளையும் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அன்வார் பயங்கரவாதத்தை ஆதரிப்பவராகத் தோன்ற விரும்பவில்லை என்றாலும், சில தண்டனைகள் நியாயமற்றதாக இருக்கக்கூடும் என்று கூறினார். உதாரணமாக, பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புபட்டதாகக் கருதப்படும் டி-ஷர்ட்டை வைத்திருந்ததற்காக சிறைத்தண்டனை அளிப்பது போன்ற தண்டனைகளை குறிப்பிட்டார்.

“தண்டனை குற்றத்திற்கு பொருந்தாது அல்லது அது மிகவும் கடுமையானது என்று நாம் உணர்ந்தால், அதை மறுபரிசீலனை செய்யலாம்.”

“பயங்கரவாதத்தில் கடுமையாகத்தான் நடந்து கொள்ள வேண்டும், நான் பயங்கரவாதத்துடன் ஒத்து போகச் சொல்லவில்லை. ஆனால் நான் சுங்கை புலோ சிறையில் இருந்த காலத்தில் சில வழக்குகளை சந்தித்தேன். டி-ஷர்ட் ஆதரவு அல்லது ஒரு அண்டை வீட்டிற்கு நன்கொடை கொடுப்பது போன்றவை ஒரு சிறிய குற்ற வழக்கு என்று நான் கருதுகிறேன்”.

இன்று அதே கருத்தை LTTE கைதிகளுக்கும் பகிர வேண்டும்,” என்று அன்வார் இன்று பாங்கியில் நடந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். ஏ.ஜி. அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டுள்ளதாகவும், அதை முடிவு செய்ய தாமஸிடம் விட்டு விடுவதாகவும் கூறினார்.

இதற்கிடையில், ஒரு தனி அறிக்கையில், அமானா சட்ட பணியகம் (Kanun) ஏ.ஜி. மற்றும் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் ஆகியோரை பயங்கரவாத குழுக்கள் தொடர்பான வர்த்தமானியை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியது.

“பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான வர்த்தமானியை ஏஜி மற்றும் உள்துறை அமைச்சரால் மறுஆய்வு செய்ய வேண்டும், இதனால் நீதியை நிலைநிறுத்த முடியும்” என்று கானூன் (Kanun) தலைவர் சுல்கர்னைன் லுக்மான் கூறினார்.

வர்த்தமானியைத் தவிர, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சோஸ்மா)/ Security Offences (Special Measures) Act (Sosma) கீழ் உள்ள பிற கைதிகளின் நிலையை அவர்களின் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் மறுஆய்வு செய்ய ஏ.ஜி.-யை கேட்டுக்கொண்டது கானூன் (Kanun).

உலகளாவிய பயங்கரவாத அமைப்பான ஒரு இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய 12 புத்தகங்களை வைத்திருந்ததற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிட்டி நூர் ஐஸ்ஷா வழக்கை ஒப்பிட்டு இதை ஒரு இனப்பிரச்சினையாக மாற்ற முயற்சிப்பவர்கள் உள்ளனர் என்பதை கானூன் (Kanun) குறிப்பிட்டுள்ளது.

“சிட்டி நூர் ஐஸ்ஷாவின் வழக்கு 2017இல் மலேசியா இன்னும் பாரிசான் ஆட்சியின் கீழ் இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அமானா சோஸ்மாவைப் பயன்படுத்துவதற்கும், சிட்டி நூர் ஐஸ்ஷாவுக்கு எதிரான அநீதிக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஈடுபட்டது,” என்று சுல்கர்னைன் கூறினார்.

எனவே, மலேசியாவில் இன மற்றும் மத பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு பொதுமக்கள் இந்த விடுதலைப் புலி பிரச்சனையை பயன்படுத்த மாட்டார்கள் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.

ஸ்ரீ இலங்காவில் செயலிழந்த பிரிவினைவாதக் குழுவாக சித்தரிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த தாமஸ் முடிவு செய்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது.

இந்த முடிவை பல டி.ஏ.பி. தலைவர்கள் பாராட்டிய போதிலும், பெர்சத்து மற்றும் அம்னோ தலைவர்களிடமிருந்து இது விமர்சனங்களைப் பெற்றது. அவர்கள் முறையே தாமஸின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி, ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளனர்.