இத்தாலியில் 200க்கும் அதிகமான கொரோனா வைரஸ் இறப்புகள்; உலகளாவிய எண்ணிக்கை 3,455

இத்தாலியில் 200க்கும் அதிகமான கொரோனா வைரஸ் இறப்புகள்; உலகளாவிய எண்ணிக்கை 3,455

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 49 உயர்ந்து, 197 ஆகியுள்ளது என்று சிவில் பாதுகாப்பு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இத்தாலி தற்போது உலகில் வேறு எந்த நாட்டையும் விட ஒரு நாளைக்கு அதிகமான இறப்புகளைப் பதிவுசெய்து வருகிறது, மேலும் இந்த வாரம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், சினிமாக்கள், நாடகங்கள் மற்றும் திரையரங்குகளை மூட அரசாங்கம் உத்தரவிட்டது.

ஐரோப்பாவில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் மொத்த எண்ணிக்கையிலான பாதிப்புகள் மொத்தம் 4,636 ஆகும்.

பாதிப்பு தொடங்கிய சீனாவில், இதுவரையில் 80,711 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும், 3,045 இறப்புகளும் பதிவாகி உள்ளன. அவற்றில் 30 பாதிப்புகள் உலக சுகாதார அமைப்பால் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டன.

உலகளாவிய இறப்பு எண்ணிக்கை இப்போது 3,455 ஆக உள்ளது. ஈரான் 142 இறப்புகள், தென் கொரியா 42 இறப்புகள் மற்றும் அமெரிக்காவில் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ரோமின் மையத்தில் அமர்ந்திருக்கும் சுதந்திர நாடான வாட்டிகன், (The Vatican) வெள்ளிக்கிழமை தனது முதல் பாதிப்பை பதிவு செய்தது.

தேசிய சுகாதார நிறுவனம், இதுவரை இறந்தவர்களின் சராசரி வயது 81 என்றும், அதில் பெரும்பான்மையானவர்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளவர்கள் என்றும் கூறியது. இதில் பெண்கள் 28 சதவீதம் மட்டுமே.

இதாலி பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை 3.5% சரிந்தது, பிப்ரவரி 21 அன்று முதல் பாதிப்பின் செய்தி அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்போது 17.4 சதவீதம் குறைந்துள்ளது.

தேசிய உற்பத்தியில் 13 சதவிகித பங்கைக் கொண்டுள்ள சுற்றுலாத் துறை, உடனடி பாதிப்பை சந்தித்துள்ளது. சுற்றுப்பயணிகள் நோய்த்தொற்று பயத்தால் அந்நாட்டை தவிர்க்கிறார்கள்.

இத்தாலிக்கு பயணங்களில் இருந்து திரும்பும் எவரும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும் அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்று செக் குடியரசு, வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. அதே நேரத்தில் அண்டை நாடான ஸ்லோவாக்கியா இத்தாலிக்கு புறப்படும் அல்லது அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்வதாகக் கூறியது.