பெரிகாத்தான் நேஷனல் – ஜி.பி.எஸ், கூட்டாட்சி அமைச்சரவைக்கு சரவாக் ஒப்புக்கொள்கிறது

பெரிகாத்தான் நேஷனல் – ஜி.பி.எஸ், கூட்டாட்சி அமைச்சரவைக்கு சரவாக் ஒப்புக்கொள்கிறது

பெரிகாத்தான் நேஷனல் (பி.என்.) உடன் கூட்டணியாக கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்)/Gabungan Parti Sarawak (GPS) மத்திய அரசில் சேரவுள்ளதாக சரவாக் அமைச்சர் அபாங் ஜோஹரி ஓபன் அறிவித்தார்.

பிரதமர் முகிதீன் யாசின் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பை விடுத்ததாகவும், “பிஎன் + ஜி.பி.எஸ்” அடிப்படையில் அமைச்சரவை அமைப்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும் அபாங் ஜோஹாரி கூறியதாக போர்னியோ போஸ்ட் அறிவித்தது.

“சரவாக் எந்த அமைச்சரவை பதவிகளைக் வகிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது பிரதமரின் உரிமையாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம் ஆட்சிக்கு வந்த பெரிகாத்தான் நேஷனல், பெர்சத்து, பாரிசான் மற்றும் பாஸ் கட்சிகளை உள்ளடக்கி உள்ளது.

முன்னதாக, கடந்த வார அரசியல் கொந்தளிப்பின் போது, சரவாக் துணை முதல்வர் ஜேம்ஸ் மாசிங், டிஏபி உடன் ஒப்பிடும்போது பாஸ் உடன் பணிபுரிவது ஜிபிஎஸ் கட்சிக்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது என்று கூறியிருந்தார்.

ஜிபிஎஸ் அமைச்சரவையில் சேருவது சரவாகின் நலன்களைக் கவனிக்க அனுமதிக்கும் என்று அபாங் ஜோஹாரி கூறினார்.

“நாங்கள் அங்கு இல்லையென்றால், என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் மத்திய அமைச்சரவையில் இல்லாவிட்டால் அதிகாரப்பூர்வமாக குரல் கொடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

1963 மலேசியா ஒப்பந்தத்தின்படி ஜி.பி.எஸ் தொடர்ந்து தங்கள் உரிமைகளைத் தொடரும் என்றும், பெட்ரோனாஸ் அம்மாநிலத்திற்கு