WHO: ஐரோப்பா இப்போது கோவிட்-19 தொற்றுநோயின் மையமாகும்

WHO: ஐரோப்பா இப்போது கோவிட்-19 தொற்றுநோயின் மையமாகும்.

ஐரோப்பா இப்போது கோவிட்-19 பாதிப்பின் மையமாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதை அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஐரோப்பாவில் இப்போது சீனாவை விட தினமும் அதிகமான கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன” என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

கோவிட்-19 தொற்று, 132 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 132,500க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன, 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எந்தவொரு நாட்டிலும் இந்த நோய் ஏற்படக்கூடும் என்றும் இது ஒரு “பொதுவான எதிரி” என்றும் அவர் கூறினார்.
பரவல் சங்கிலியை அழிக்க அனைத்து நாடுகளும் “கண்டறிந்து, பாதுகாத்து, சிகிச்சையளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.