தெலுக் இந்தான் மருத்துவமனை ஊழியர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோவிட் -19 பாதித்ததில் பல தெலுக் இந்தான் மருத்துவமனை பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

“சில மருத்துவ ஊழியர்கள் கோவிட்-19 இன் பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு, வழக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட்-19, நாட்டில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது வேளையில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் இன்று ஆறாவது நாள் அமலில் உள்ளது.

நேற்று மலேசியா 1,306 பாதிப்புகளைப் பதிவு செய்தது.

இன்றுவரை, 19 சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மற்றும் ஐந்து தனியார் துறை மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், MoH ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நோய்த்தொற்று நோயாளிகளைக் கையாள்வதில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை கடைபிடிக்கத் தவறியதனால் பாதிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து தெலுக் இந்தான் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஸ்கிரீனிங் சோதனை நடத்தப்படவில்லை என்று குற்றத்தை எழுப்பியுள்ளது.

“பொதுமக்களின் அச்சத்தைத் தூண்டும் எந்தவொரு செய்தியையும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்” என்று நூர் ஹிஷாம் கூறினார்.