கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளி தற்கொலை செய்து கொண்டனர்

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு நோயாளி செர்டாங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் 7டி வார்டு அறையில் நடந்ததாக சீனா பிரஸ் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், 62 வயதான நபர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கோவிட்-19 அறிகுறிகளைக் காட்டிய பின்னர் வார்டில் அனுமதிக்கப்பட்டு, சோதனை முடிவுக்காக காத்திருந்ததாக தெரிகிறது.

நோயாளி ஒரு குளியலறையில் அதிக நேரம் செலவழித்ததை உணர்ந்த செவிலியர், விசாரிக்கச் சென்றுள்ளார். அப்போது, பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு இறந்ததை கண்டுள்ளார்.

சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று செப்பாங் காவல்துறைத் தலைவர் வான் கமருல் அஸ்ரான் கூறியதாக அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. தடயவியல் விசாரணைக்காக இந்த வார்ட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உதவி பெற விரும்புவோர் 03-79568145 என்ற எண்ணில் Befrienders-சை அழைக்கலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் மின்னஞ்சல் செய்யலாம்.

சுகாதார அமைச்சு மற்றும் Mercy Malaysia, கோவிட்-19 பாதிப்பால் மனோ ரீதியால் பாதிக்கப்பட்ட முன்னணி பணியாட்களுக்கும் பொது மக்களுக்கும் உதவ, சமூக ஆதரவை வழங்க ஒரு ஹாட்லைனை வழங்குகிறது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 011-63996482, 011-63994236, அல்லது 03-9359935 என்ற ஹாட்லைன் எண்களை தொடர்புகொள்ளலாம்.