மலேசியாவில் 31 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மார்ச் 12க்குப் பிறகு இதுவே மிகக் குறைவாக பதிவாகிய எண்ணிக்கையாகும்.
இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,851 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்று மாலை புத்ராஜெயாவில் பேசிய அவர் ஒரு புதிய இறப்பையும் அறிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 75 கோவிட்-19 நோயாளிகளும் மீட்கப்பட்டுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 4,032 அல்லது மொத்த பாதிப்புகளில் 68.9 சதவீதமாக உள்ளது.
சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், 36 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யு) இருக்கின்றனர். இதில், 17 நோயாளிகளுக்கு சுவாச சிகிச்சை தேவைப்படுகிறது.

























