70 புதிய பாதிப்புகள், மேலும் ஓர் இறப்பு, 76% மீட்கப்பட்டனர்

மலேசியாவில் 70 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்று பிற்பகல் வரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,726 ஆக உள்ளது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 70 புதிய பாதிப்புகளில் 13 இறக்குமதி பாதிப்புகளையும் 57 உள்ளூர் தொற்று பாதிப்புகளையும் உள்ளடக்கியதாக அறிவித்தார்.

புதிய 70 பாதிப்புகளில் 31 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

மேலும் 88 பாதிப்புகள் இன்று மீண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,113 அல்லது 76 சதவீதமாக உள்ளது.

குணப்படுத்தப்பட்ட நோயாளிகளைக் கருத்தில் கொண்டு, மலேசியாவில் தற்போது 1,504 செயலில் உள்ள பாதிப்புகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன.

மொத்தம் 20 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் ஏழு பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

கோவிட்-19 தொடர்பாக நூர் ஹிஷாம் மற்றொரு புதிய மரணத்தை அறிவித்தார், மலேசியாவில் பாதிப்பினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 109 ஆக இருக்கிறது.

109வது இறப்பு (‘நோயாளி 6657’) நீரிழிவு மற்றும் புற்றுநோயின் பின்னணியுடன் 63 வயதான மலேசிய நபரை உள்ளடக்கியது. அவர் மே 8, 2020 அன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், 2020 மே 10 அன்று அதிகாலை 5.15 மணிக்கு இறந்துவிட்டார்.