கோவிட்-19: 36 புதிய பாதிப்புகள், 88 மீட்டெடுப்புகள், இறப்புகள் ஏதும் இல்லை

இன்று நண்பகல் நிலவரப்படி 36 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,855 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட 28 பாதிப்புகள் உள்ளதாகக் கூறினார்.

88 நோயாளிகள் மீட்கப்பட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 5,439 அல்லது மொத்த பாதிப்புகளில் 79.3 சதவிகிதம் என தெரிவித்தார்.

“கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 1,304 ஆக உள்ளன” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆகும், அவர்களில் ஐந்து பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

கோவிட்-19 நோயாளிகள் சம்பந்தப்பட்ட புதிய மரண பதிவுகள் இன்று நண்பகல் வரை ஏதும் இல்லை. இதுவரை இறப்பு எண்ணிக்கை 112 ஆக உள்ளது, மொத்த பாதிப்புகளில் இது 1.63 சதவீதம் ஆகும்.