ஒரு செயல் பிரதமரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை – நிபுணர்

பிரதம மந்திரி முகிதீன் யாசின் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, ஒரு செயல் பிரதமரை நியமிக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று அரசியலமைப்பு நிபுணர் பேராசிரியர் ஷாட் சலீம் ஃபாரூகி கூறினார்.

“செயல் பிரதமர் அல்லது துணை பிரதமர் பதவியைப் பற்றி அரசியலமைப்பு எதுவும் குறிப்பிடவில்லை. தேவைப்பட்டால் அவர் நியமிக்கப்படுவாரா என்பதை பிரதமரே தீர்மானிக்க வேண்டும்.”

“இதற்கு முன்னரும் இதேபோன்ற பல சூழ்நிலைகள் இருந்தன. எடுத்துக்காட்டாக, பிரதமர் உடல்நிலை சரியில்லாமல் போனபோது அல்லது வெளிநாட்டில் இருந்தபோது, ஆனால் இணைய தகவல்தொடர்புகளின் இந்த சகாப்தத்தில், ஒரு பிரதமர் தனது ஆலோசனைகளையும் முடிவுகளையும் டிஜிட்டல் வழியாகவும் தொலைபேசி மூலமாகவும் செயல்படுத்த முடியும். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.”

“தனிமைப்படுத்தப்பட்ட முகிதீன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.சி.யுவில் இருந்தபோது போல் அல்ல. அவர் ஆட்சி செய்யும் திறனை இழந்துவிட்டார் என்று அர்த்தமல்ல.” என்று அவரி கூறினார்.

முகிதீன், தனது தேசிய கூட்டணி அமைச்சரவையின் தலைவரான போது, நான்கு மூத்த அமைச்சர்களை நியமிக்க முடிவு செய்தார். ஆனால் துணை பிரதமர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.