“பெர்சத்து, ஒற்றுமையாக இருங்கள், நான் புதியவன்” – அஸ்மின்

புதிய அரசியல் கட்சியை நிறுவுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள எம்ஐடிஐ கோபுரத்தில் இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நேரத்தில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் திறப்பது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் மக்களுக்கு சேவை செய்வதில் தான் நாங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.”

முன்னதாக, அவர் ஒரு புதிய கட்சியை, அதாவது தேசிய நீதிக் கட்சியை (Parti Keadilan Negara) அமைப்பார் என்ற ஊகம் குறித்து கேட்கப்பட்டார்.

இதற்கிடையில், பெர்சத்து கட்சியில் அவர் உறுப்பிய நிலை குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.

அது குறித்து மேல் விவரிக்காமல், “பெர்சத்து, ஒன்றுபடுங்கள், நான் ஒரு புதியவன். செயல்முறைபடி செல்ல வேண்டும்,” என்று அவர் வெறுமனே பதிலளித்தார்.

மே 23 அன்று, பெர்சத்துவின் பொதுச்செயலாளர் மர்சுகி யஹ்யா, பி.கே.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய அஸ்மினும் மற்ற ஒன்பது எம்.பி.க்களும் பெர்சத்துவில் சேர தங்கள் உறுப்பினர் படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார்.

முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பெர்சத்துவின் தலைவர் பிரதமர் முகிதீன் யாசின், அஸ்மின் மற்றும் அவரது ஒன்பது எம்.பி.க்கள் பெர்சத்துவில் இணைய ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அஸ்மினால் புதிய கட்சி அமைப்பது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனும் இன்று மறுத்துள்ளார்.

அஸ்மினிடமிருந்து எந்தவொரு புதிய கட்சி உருவாக்கும் கோரிக்கைகளையும் சங்கங்களின் பதிவாளர் (Jabatan Pendaftar Pertubuhan (ROS) பெறவில்லை என்று ஹம்சா கூறினார்.