அஸார் ஹருன் சபாநாயகராக நிலைநிறுத்தப்பட்டார், டாக்டர் எம்-இன் வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது

மக்களவையின் சபாநாயகராக அஸார் அஸிஸான் ஹருன் தொடர்ந்து இருப்பார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் கமல் முஹமட் ஷாஹித்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் வழக்குக்கு எதிரான அஸாரின் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டது.

மக்களவையின் துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டாக்டர் மகாதீரின் சட்ட நடவடிக்கையை எதிர்த்த அசலினா ஒத்மானின்  விண்ணப்பத்தையும் நீதிமன்றம் அனுமதித்தது.

அதோடு, சபாநாயகர் நியமனம் தொடர்பான பிரச்சினையில் முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஜூலை 23-ம் தேதி, லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் மகாதீர், ஜெர்லுன் எம்.பி. முக்ரிஸ் மகாதிர், சிம்பாங் ரெங்கம் எம்.பி. மஸ்லீ மாலிக், குபாங் பாசு எம்.பி. அமிருட்டின் ஹம்ஸா மற்றும் ஸ்ரீ காடிங் எம்.பி. ஷாருதீன் சாலே ஆகியோர் தொடக்க வழக்கைத் தாக்கல் செய்தனர்.

அஸார் மற்றும் அசலினாவின் நியமனங்கள் செல்லுபடியாகாதவை மற்றும் மத்திய அரசியலமைப்பு மற்றும் மக்களவைக்கு முரணானவை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென அந்த ஐந்து வாதிகளும் கோரினர்.

சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர்களை நியமிக்க, அனைத்து எம்.பி.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற அறிவிப்பையும் அவர்கள் கேட்டனர்.