சையத் சாதிக் : அமைச்சரவையில் அஸலினா இல்லை, பிரதமர் வாய்ப்பை வீணடித்தார்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அவரது அமைச்சரவையில் சில வாய்ப்புகளை வீணடித்ததாக, மூடா கட்சி தலைவர் சையத் சதிக் சையது அப்துல் இரஹ்மான் விவரித்தார்.

சையத் சாதிக் பல பெயர்களைக் குறிப்பிட்டார், பெங்கராங் எம்.பி. அஸலீனா ஒத்மான், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி, அம்னோ தகவல்தொடர்பு பிரிவு இயக்குநர் ஷாரில் ஹம்டான் மற்றும் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி போன்றோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“நல்ல செயல்திறன் இல்லாத ஒரு அமைச்சரை ஏன் நியமிக்க வேண்டும்? மோசமான பதிவுகளைக் கொண்ட தலைவர்கள் ஏன் இன்னும் இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்?

“எனவே, இதற்கு முன் தோல்வியடைந்த அரசாங்கம், இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்து மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளது சுமார்,” என்று அவர் கூறினார்.