இஸ்மாயில் சப்ரி தலைமையிலான அரசாங்கம், நாளை பி.எச்.-உடன் எம்.ஓ.யு.-இல் கையெழுத்திடும்

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) மற்றும் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான மத்திய அரசு, நாளை (செப்டம்பர் 13) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு.) கையெழுத்திட ஒப்புக்கொண்டன.

ஒரு கூட்டு அறிக்கையில், அரசாங்கமும் பி.எச். பிரதிநிதிகளும் உடன்படிக்கையின் உள்ளடக்கங்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதாகக் கூறினர்.

“இரு தரப்பினரும் இந்த வெளிப்படையான நினைவுகளைப் பொதுமக்களுக்கு முழு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுக்கான அர்ப்பணிப்பாக வெளிப்படுத்த முயல்கின்றனர்.

“அதை மொழிபெயர்க்கும் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப, இரு தரப்பினரும் இந்தப் புரிதலில் நாளை, 13 செப்டம்பர் 2021 மாலை 5 மணிக்கு, மலேசிய நாடாளுமன்றத்தில் கையெழுத்திடவுள்ளனர்,” என்று கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இஸ்மாயில் சப்ரி, பக்காத்தான் ஹராப்பான் கட்சித் தலைவர்களான, பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம், டிஏபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் உப்கோ தலைவர் வில்ஃப்ரெட் மாடியஸ் தங்காவ் ஆகியோர் நிறைவு செய்வார்கள்.

அரசாங்கப் பிரதிநிதிகளாக, இந்த அறிக்கையில் உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுடின், எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் தக்கியுத்தீன் ஹாசன், பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுார் மூசா, நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ஆகியோர் கையெழுத்திடுவர்.

இதற்கிடையில், பிகேஆர் தலைமை செயலாளர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில், அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப், டிஏபி தேசிய அமைப்பு செயலாளர் லோக் சீவ் ஃபூக், டிஏபி தேசியத் துணைத் தலைவர் கோபிந்த் சிங் தியோ, பிகேஆர் தகவல் பிரிவு  தலைவர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் மற்றும் பி.கே.ஆர். தகவல் தொடர்பு இயக்குநர் ஃபஹ்மி ஃபாட்சில் ஆகியோர் பி.எச். கூட்டணியப் பிரதிநிதித்துவப்படுத்துவர்.

பி.எச். உயர் தலைவர்களும் இஸ்மாயில் சப்ரியும் கடந்த மாதம் முதல் ஆலோசனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 25 கூட்டத்திற்குப் பிறகு, தங்கள் முதல் கூட்டு அறிக்கையில், இரு தரப்பினரும் நாடாளுமன்ற நிறுவனங்களை வலுப்படுத்த மற்ற விஷயங்களில் உடன்படுவதாகக் கூறினர்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஏழு நிறுவன சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக இஸ்மாயில் சப்ரி ஓர் அறிக்கையில் அறிவித்தார்.