மலாக்காவில் உள்ள 35 பன்றிப் பண்ணைகள் ASF தொற்று பகுதிகளாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன

மலாக்கா அரசாங்கம், மஸ்ஜித் தனாவில்(Masjid Tanah) உள்ள பாயா மெங்குவாங்கில் (Paya Mengkuang)  உள்ள 35 பன்றிப் பண்ணைகளை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய் பரவல் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என அறிவித்துள்ளது.

ASF இன் பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த அறிவித்தல் என்று முதல்வர் சுலைமான் எம்.டி அலி கூறினார்.

இது கால்நடை பண்ணைகளை மட்டுமே உள்ளடக்கியது மற்றும் நோய் பரவாமல் இருக்க கட்டுப்பாடு கடுமையாக இருக்கும், 45,000 கால்நடைகள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகின்றன,’ என்று பெம்பன் மஜு ஜெயா(Bemban Maju Jaya) கருத்தரங்கை இன்று தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறினார்

முன்னதாக, பயா மெங்குவாங்கில் 16 வணிகப் பன்றிப் பண்ணைகள் ASF-ல் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய கால்நடை மருத்துவ சேவைத் துறை உறுதிப்படுத்தியது.

இதற்கிடையில், வெள்ள அபாயத்தில் உள்ள மலகாவின் 124 பகுதிகளில் மாநில அரசு அவசர எச்சரிக்கைச் சங்கொலிகளை (சைரன்களை)  நிறுவும் என்று சுலைமான் கூறினார்.

“இந்த முறையின் வழி வெள்ளம் ஏற்படும் முன் தயார் நிலையில் இருக்க சுற்றுப்புற குடியிருப்பாளர்களுக்கு  முன்னெச்சரிக்கைகளை வழங்க முடியும்” என்று அவர் கூறினார்.