கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு இறந்த சிறுவனின் பெற்றோரைச் கைரி நாளை சந்திக்கிறார்!

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு மரணமடந்த ரவினேஷ் குமாரின் பெற்றோரை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நாளை சந்தித்து அவர்களின் மகனின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடயவியல் அறிக்கையை அவர்களுக்கு வழங்க உள்ளார்.

அந்த 13 வயது மாணவன் தனது முதல் கோவிட்-19 தடுப்பூசி ஜப் முடிந்து 18 நாட்களுக்குப் பிறகு ஜனவரி 16 அன்று காலமானதிலிருந்து மரணத்திற்கான காரணத்தை அமைச்சு விசாரித்து வருகிறது.

இன்று அறிவித்த செய்தியில், விரிவான சோதனைகள் தேவைப்படுவதால் தாமதம் ஏற்பட்டது என்று கைரி விளக்கினார்.

” அவர் இறந்த பிறகு பிரேத பரிசோதனை மட்டுமல்ல, அவரது இரத்தம் மற்றும் திசுக்களின் மாதிரிகளையும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம், ஒரு முழுமையான விசாரணையை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.”

“வேதியியல் துறையின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருந்தோம்,  அது இன்று எங்களுக்கு கிடைத்தது. அதனால் தான் நாளை அவர்து பெற்றோரை சந்திக்க உள்ளேன்” என்று கைரி கூறினார்.

மேலும் “ரவினேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையை அவரது பெற்றோர் அனுமதியின்றி பொதுமக்களுக்கு வெளியிட முடியாது” என்றார்.

கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்த அமைச்சகத்தின் சிறப்பு மருந்தக கண்காணிப்பு குழு பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார். நோய்த்தடுப்பு (AEFI) வழக்குகளைத் தொடர்ந்து கோவிட்-19 பாதகமான நிகழ்வுகளைக் கவனிப்பதற்கு இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ, வெளிப்படையான விசாரணையை நடத்தவும், ரவிநேஷின்  தடயவியல் அறிக்கையை வெளியிடவும் அமைச்ரை வலியுறுத்தி வருகிறார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, அந்த மாணவனின் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மறுபரிசீலனை செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஒரு காணொளி வைரலாகியுள்ளது.