பல்கலைக்கழக மாணவர்களுக்கு விமான டிக்கெட் மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது

டெக்னோலோஜி மாரா பல்கலைக்கழகத்தில் (UiTM) இன்று நடந்த உரையாடல் அமர்வில் பேசிய அவர், இந்த விவகாரம்குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோகேவுடன் விவாதிப்பதாகக் கூறினார்.

பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாகச் சபா மற்றும் சரவாக்கைச் சேர்ந்தவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது அதிக டிக்கெட் விலைகளால் சுமையாக இருப்பதாக ஒரு மாணவர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

மாணவர்கள் மத்தியில் இது ஒரு பொதுவான பிரச்சினை என்று அன்வார் ஒப்புக்கொண்டார்.

“நாங்கள் விமான நிறுவனங்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம், மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருடனும் ஆலோசிப்போம், “என்று ஷா ஆலமில் நடந்த அமர்வில் அவர் கூறினார்.

மார்ச் 14 அன்று, டிக்கெட் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு விமான நிறுவனங்களை லோகே வலியுறுத்தினார்.

விமான டிக்கெட்டுகளுக்கு உச்சவரம்பு விலையை நிர்ணயிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.