மலேசியாவில் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தை அமைப்பதற்கான முன்மொழிவை அரசாங்கம் ஆய்வு செய்கிறது

மலேசியாவில் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகப் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் அஸலினா ஒத்மான் கூறினார்.

முகநூல் பதிவில், மலேசியாவின் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் நீதித்துறையின் பிரதிநிதிகளை நேற்று நீதியரசரின் மாளிகையில் சந்தித்தபோது இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாக அசாலினா கூறினார்.

வணிகச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான பிராந்தியத்தில் மலேசியாவை முதன்மையான இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் கூறினார்.

“… மேலும், மலேசியாவிற்கு அன்னிய முதலீட்டைப் பொருத்தமான மாதிரிகள்மூலம் ஈர்ப்பதற்கான ஒற்றுமை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையை அதிகரிக்கவும்,” என்று அவர் கூறினார்.