போலீஸ்: துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வழக்கமான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன

1-polis2நேற்று ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒரு குண்டர் கும்பலின் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் வழக்கமான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என பினாங்கு போலீசார் உறுதியாகக்  கூறுகின்றனர்.

இதனை வலியுறுத்திய பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி, “எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சந்தேக நபர்களை நோக்கி 30 தடவை சுட்டதாகக் கூறுவது உண்மையல்ல. அந்த அடுக்குமாடி வீட்டுக்குள் நுழைவதற்குமுன் எங்களை அடையாளப்படுத்திக் கொண்டோம். அவர்கள்தான் எங்களை நோக்கிச் சுட்டார்கள்.

“நாங்கள் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி சில தடவை சுட்டோம். அவர்களின் குடும்பத்தார் கூறுவதுபோல் நடந்துகொள்ளவில்லை”, என்றாரவர்.