1MDB நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பு அமெரிக்க நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

“1MDB  நிதியிலிருந்து முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட நியூயார்க்கின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும், அதனுடன் தொடர்புடைய வாடகை வருமானத்தையும் பறிமுதல் செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை (DOJ) பெற்றுள்ளது.”

“தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் லோ டெக் ஜோ (Jho Low) என்பவரின் தனிப்பட்ட உதவியாளரான கேத்தரின் டான் (Catherine Tan) என்பவரின் நலனுக்காக, திருடப்பட்ட நிதியைப் பயன்படுத்தி இந்தச் சொத்து வாங்கப்பட்டது. மேலும், இந்த வீட்டின் வாடகை வருமானம் மூலமும் அவர் பயனடைந்தார்.”

லோ டேக் ஜோ, ஜோ லோ என்றும் அழைக்கப்படுபவர்

இந்தக் குடிமையியல் சொத்து பறிமுதல் வழக்கை (civil forfeiture case), எஃப்.பி.ஐ (FBI) மற்றும் யு.எஸ் மார்ஷல்ஸ் சர்வீஸ் (US Marshals Service) உள்ளிட்ட முகமைகளின் ஆதரவுடன், அமெரிக்க நீதித்துறையின் (DOJ) பணமோசடி, போதைப்பொருள் மற்றும் சொத்து பறிமுதல் பிரிவு விசாரித்து (வழக்குத் தொடர்ந்து) வருகிறது.

“இந்த வழக்கோடு தொடர்புடைய சொத்துக்களைக் கண்டறிந்து மீட்பதற்கான பரந்த சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, தங்களது விசாரணைகள் மற்றும் அது சார்ந்த சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் — அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (Attorney-General’s Chambers), காவல்துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உள்ளிட்ட — மலேசிய அதிகாரிகள் கணிசமான உதவிகளை வழங்கியதாக டிஓஜே (DOJ – அமெரிக்க நீதித்துறை) குறிப்பிட்டுள்ளது.”