ஜொகூர் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மக்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும், ‘நஜீப் ரசாக் இப்போது சிறையில் இருக்கிறார், எனவே அவரை நிம்மதியாக விடுங்கள்’.
பகத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார் இப்ராஹிம், இன்று கூலாயில் நடைபெற்ற ஜொகூர் தேர்தல் பிரச்சார நிகழ்வு ஒன்றில் உரையாற்றினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், நஜிப் ரசாக் விடுதலை செய்யப்படலாம் என்ற விவகாரத்தை அரசியல் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், இந்த விவகாரத்தை தொடர்ந்து அரசியல்மயமாக்குவதை விடுத்து, மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
‘நஜிப் இப்போது சிறையில் இருக்கிறார், எனவே அவரை அப்படியே விட்டுவிடுங்கள். என்னை கேட்டால், இதுவே போதும் என்று சொல்வேன். நாம் இன்னும் (1MDB) கடனைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம்… அதை நாம் இன்னும் முழுமையாகச் செலுத்தி முடிக்கவில்லை’ என்று அவர் கூறினார். பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார், இன்று இங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அன்வார் கூறுகையில், தற்போது அரசாங்கம் 1MDB-யின் ரிம 51 பில்லியன் கடன் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது. பொறுப்பற்ற சிலரால் அந்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருந்திருந்தால், அந்தத் தொகையை பொதுமக்களுக்கான வசதிகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பயன்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என்றார்.
‘நம்மிடம் அந்தப் பணம் இருந்து, 1MDB கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லையென்றால், அதை நாம் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் மற்றும் ஏழைகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இப்போது நம்மால் அதைச் செய்ய முடியாது,’ என்று அவர் கூறினார்.
























