மசீச: ஜிஎல்சி ஓர் இனத்திற்குச் சொந்தமானதல்ல

MCA- Wee Ka Siong

பூமிபுத்ரா சமூகத்திற்கு புத்ராஜெயாவின் பதிய பொருளாதார திட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், மசீசவின் இளைஞர் பிரிவு அரசு தொடர்புள்ள நிறுவனங்கள் (ஜிஎல்சி) இன அடிப்படையிலான இலக்குகளை உருவாக்கக் கூடாது ஏனென்றால் அவற்றுக்கான நிதி அனைத்து மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்று பிரதமர் நஜிப்புக்கு நினைவுறுத்தியுள்ளது.

“இன்றைய உள்ளூர் ஜிஎல்சிகள் அவை இப்போது இருக்கின்ற நிலைக்கு மேம்பாடு அடைந்ததற்கான நிதி வளம் அனைத்து இன மக்களின் வரிப்பணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது நாங்கள் அறிவோம்.

“ஆகவே, ஜிஎல்சிகலின் செயல்பாடுகளில் இன வேறுபாடு இருக்கக் கூடாது”, என்று மசீச இளஞர் பிரிவுத் தலைவர் வீ காசி யோங் இன்று வெளியிட்ட ஓரு செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்.

பூமிபுத்ரா சமூகத்திற்காக பல பில்லியன் ரிங்கிட் செலவிடும் இன அடிப்படையிலான கொள்கைகளை நேற்று பிரதமர் நஜிப் அறிவித்திருந்ததற்கு எதிர்வினையாற்றிய வீ மேற்கண்டவாறு கூறினார்.

 

 

 

 

 

TAGS: