உதவித் தொகை குறைப்பு பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது கருவூலம்

1 inflationஎரிபொருளுக்கான உதவித் தொகை குறைக்கப்பட்டதால் எரிபொருள் விலை உயர்ந்திருந்தாலும் நாட்டின் பணவீக்கத்தில் அது பெருந் தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கருவூலத் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா கூறுகிறார்.

எரிபொருள் விலை உயர்வால் பணவீக்க உயர்வு  குறைந்த விகிதத்தில்தான் இருக்கும் என்பது  நிதி அமைச்சின் கணிப்பு என்றாரவர்.   இப்போது 1.7 விழுக்காடாகவுள்ள பணவீக்க விகிதம் 0.2 விழுக்காடு உயர்ந்து 1.9 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.