ஜாஹிட்: இடம் அளித்தால் மடம் கட்டுவார்கள்

zahid hamidiகாலஞ்சென்ற மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் அனுமதித்தால் அதை வைத்து அவருக்கு ஒரு நினைவு மண்டபமே அமைத்து விடுவார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.

“அஸ்தி ஒரு பிரச்னை அல்ல.  ஆனால் அதை வைத்து யாராவது ஒருவர் அவருக்கு ஒரு நினைவிடம் கட்டுவார்.  அது, அவருக்கு ஒரு அங்கீகாரமாக  அமையும்.  அதுதான் எங்கள் கவலை”, என இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஜாஹிட்.