பண அரசியல் பற்றி எம்ஏசிசி-இடம் தெரிவிக்கவும்: கட்சிகளுக்கு லவ் அறிவுறுத்தல்

moneyவிரைவில் தேர்தல்களை நடத்தவிருக்கும் அரசியல் கட்சிகள்,  பண அரசியல் பற்றிக் கூறப்படும் புகார்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) த்திடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கூறிய பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் செங் குவான்,  எதிர்வரும் கட்சித் தேர்தல்களில் பணம் கொடுத்து தங்களைக் கவரும் முயற்சிகளை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அப்படிப்பட்ட முறைகேடுகள் பற்றி அறிந்தோர்,  எம்ஏசிசி உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த பால் லவ் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பே அமைச்சராக செயல்பட்ட விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருக்கிறது.

ஊழல் எங்கிருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். முதலில் அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும், அவர்களுடன் தொடர்புடைய அவர்களது உற்றார் உறவினர்களும் ஊழலில் ஈடுபடுவதை இந்த அமைச்சர் தடுக்க முற்பட வேண்டும். அதன் பின்னர், கட்சிகளில் நடக்கும் ஊழல்களைப் பற்றி இவர் உபதேசிக்கலாம்.