லாவோஸ் விமான விபத்தில் பலியான 49 பேரில் ஒருவர் மலேசியர்

airlinesநேற்று, லாவோஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்  தென் லாவோசில், மீகோங் ஆற்றில் விழுந்து நொறுங்கியதற்கு மோசமான வானிலைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

அவ்விபத்தில் விமானத்தில்  இருந்த  49 பேரும் உயிர் இழந்தனர்  என லாவோஸ் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.   10 நாடுகளைச் சேர்ந்த 44 பயணிகள் அதில் பயணம் செய்தனர். அவர்களில் ஒருவர் மலேசியர்.

– Reuters