குற்றவியல் சட்டத் திருத்தங்களைக் குறைகூறினார் பிஎன்னின் அஸலினா

AZALINA OTHMANநாடாளுமன்றத்தில், அஸலினா ஒத்மான்(பிஎன் -பெங்கேராங்), அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் செய்யும் திருத்தங்களினால் “அப்பாவி மக்கள்” பாதிக்கப்படலாம் என்று கண்டித்தது வியப்பைத் தந்தது.

குறிப்பாக, தேசிய கொடியான ஜாலோர் கெமிலாங்கை அவமதித்தால் ஐந்தாண்டுச் சிறை என்பதை அவர் குறைகூறினார்.

“அத்தவற்றைச் செய்தவன் விளைவுகளை அறியாத ஒரு சிறுவன் என்றால் என்னவாகும்? பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்கள், கொலைகாரர்கள் ஆகியோருடன் அல்லவா அவனும் சிறை வைக்கப்படுவான்?”, என்றவர் கேட்டார்.