கெராக்கானும் டிஏபி போலவே மலாய்க்காரர்களுக்குக் குழி பறிக்கிறது

ruslanகெராக்கானும் டிஏபியைப் போன்றதுதான் என்று வருணித்த மலாய் வலச்சாரி அமைப்பான பெர்காசா, உள்ளுக்குள் சீன-இனவாதத்தை வைத்துக்கொண்டு வெளிவேடம் போடும் அக்கட்சி, மலேசியாவில் மலாய்க்காரர் மேலாதிக்கத்தையும் அரசியல் அதிகாரத்தையும் தகர்க்கும் இரகசிய திட்டத்தைக் கொண்டிருப்பதாக சாடியது.

“மலாய்க்காரர்கள் முட்டாள்கள் அல்லர்”, என பெர்காசாவின் தகவல் தலைவர் ருஸ்லான் காசிம் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்தது.

“கெராக்கான், மக்களைத் தவறான திசையில் திருப்பிவிட வேண்டாம். வெளிக்கு டிஏபியை எதிர்ப்பதுபோல் காணப்பட்டாலும் இரண்டும் ஒத்த கருத்துடையவை. மலாய்க்காரர்களின் மேலாதிக்கத்தை, அதிகாரத்தை, அரசியல் தலைமையை உடைத்தெறிவதுதான் அவற்றின் நோக்கம்”, என ருஸ்லான் கூறினார்.