இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

செம்பருத்தி இணையத்தள வாசகர்கள் அனைவரும் எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். 

deepavali semசுடரின் நடனம் தொடரும் தீபங்களில்,
காணும் போதே களிப்புறும் உள்ளம்.
வானின் இருளில் வண்ணங்கள் தூவி,
மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள்.
பட்டுத் துணியும் பரிசுப் பொருளும்,
கிடைத்திட‌ இன்புறும் சின்னஞ் சிறார்கள்.
என்றும் இனிமையாய் இவ‌ர்க‌ளைப் போலே,
இருந்திடவாழ்த்துக்கள் இத்தீபாவளி நன்நாளில் !
( நன்றி: சதங்கா)

தீபாவளிக்கென  சில நகைச்சுவை துணுக்குகள்.

மக்கள்:  என்ன தலைவா தீபாவளிக்குள்ள பெர்மாத்தா வீட்டு பிரச்சனைய தீர்க்க  ஒண்ணுமே எய்யாம எது கேட்டாலும் சிரிக்கிறீங்களே?

தலைவன்: “நான் சிரிச்சா தீபாவளி ஹோய்…”
என்ன இது. கூட்டணி வெடின்னு சொன்னீங்க. ஆனா, இந்தக் கட்டுல ஒரே ஒரு வெடிதான் வெடிக்குது.
என்ன செய்யறது. கூட்டணில அந்த ஒரு வெடிக்கு மட்டும்தான் எல்லா பவரும்.
சங்கு சக்கரம் மாதிரி வளைய வளைய வந்து மத்தாப்பு மாதிரி சிரிச்சவனுக்கு,  நம்பிக்கையோடு  ஓட்டு போட்டுயே, வீட்டுப் பிரச்சனை. என்ன ஆச்சு ?
வண்ண வண்ணமாய் – புஸ்வாணமாதான்!

அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?
அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறங்க

தீபாவளிக்கு அரசியல் தலைவர் கொடுத்த இனிப்பான செய்தி என்ன?  சீனி விலையை ஏத்துனா, இல்லறத்தில இன்பம் பெருகுமாம்.     அப்படினா கேழ்வரகுல நெய்வடியுமே!

எதுக்கு சார் உங்க வீட்ல பட்டாசு வெடிக்க என்னைக் கூப்பிடறீங்க ?
நீங்க நிறைய பேரோட வாழ்க்கைக்கு வேட்டு வெச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான்.

தலைவர் புஸ்வாணம் கொளுத்தி குழந்தை மாதிரி சந்தோஷப்படறாரே.. .
வத்தி வெக்கற வேலையாச்சே.. அவருக்கு பிடிக்காம போகுமா ?

உங்களை பார்த்தா சிரிப்பா வருது

ஏன் ?

நீங்க சந்தோஷ மூட்ல இருக்கிறதா சொன்னீங்களே.. . அதான்!