சுரேந்திரன் மக்களவையிலிருந்து மறுபடியும் வெளியேற்றப்பட்டார்

surenபாடாங் செராய் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான என். சுரேந்திரன், நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டார். கோலாலும்பூர், ஜாலான் பி.ரம்லியில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் ஆலய உடைப்புமீது அவசரத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயன்றபோது மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அவரை வெளியேறுமாறு  உத்தரவிட்டார்.

அவசரத் தீர்மானத்தை முன்வைத்த சுரேந்திரன் அதற்கான காரணங்களை எடுத்துச்சொல்ல முற்பட்டபோது அவர் மக்களவைக் கூட்டத்தைத் தாமதப்படுத்தப் பார்க்கிறார் என்று கூறி பண்டிகார் அவரை மக்களவையிலிருந்து வெளியேற்றினார்.

TAGS: