கூ நான்: சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு குப்பை அகற்ற உதவும்

1 adnanமாநகரில் சேரும் குப்பையை அள்ளும் செலவு கூடிக் கொண்டே போகிறது. அதுதான் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்த முக்கிய காரணம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார்.

டிபிகேஎல் தலைமையகத்தில் செய்தியாளர்களீடம் பேசிய தெங்கு அட்னான், குப்பையின் அளவும் கூடி வருகிறது. அதை அள்ளும் செலவும் கூடி வருகிறது என்றார்.

“ஒவ்வொரு நாளும் கூட்டரசுப் பிரதேசத்தில் குப்பை சேர்கிறது, சேர்கிறது அவ்வளவு சேர்கிறது. ஆயிரமாயிரம் டன் கணக்கில் சேர்கிறது”, என்றாரவர்.