என்எப்சி மீதான அறிக்கையை பிஏசி டிசம்பர் 3-இல் சமர்ப்பிக்கும்

1 nur jaslanநேசனல் ஃபீட்லோட் செண்டர் (என்எப்சி) மீதான  பொதுக் கணக்குக் குழு(பிஏசி)-வின்  அறிக்கை ஒரு வாரம் தாமதித்து டிசம்பர் 3-இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

முந்தைய பிஏசி தயாரித்திருந்த அந்த அறிக்கையை  இப்போதைய பிஏசி கடந்த வாரம் ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்று பிஏசி-இன் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர்  நூர் ஜஸ்லான்,  இலக்குகளை அடையத் தவறிய  அந்நிறுவனத்தின்மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும்  அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.